(4 வருடங்களுக்கு முன்னர் எழுதிய பதிவின் மீள் இடுகை)
‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா.
‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான்.
அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை.
ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் [...]
Written on June 29, 2009 | Posted in
நினைவுகள்,
பத்திகள் |
16 Comments
ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக இருக்கின்றன. பொருளாதார நெருக்கடியும் பற்றாக்குறையும் நிறைந்த சூழலில் இதழாக்கங்களுக்கான அதிகரித்த செலவும் அவற்றை இதழ்களின் விலைகளில் சுமத்துவதும் இவ்வாறான முயற்சிகள் ஆரம்பித்த வேகத்திலேயே அடங்கியும் விடுகின்றன.
யாழ்ப்பாணத்திலிருந்து [...]
Written on June 22, 2009 | Posted in
புத்தகங்கள் |
2 Comments
சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என் இருபத்தியொரு வயதில் அவன் அப்பாவாகியிருந்தான். காதலித்தவளையே கல்யாணம் கட்டுவது ஒருவரமென அப்போது நான் நம்பியிருந்தேன். அவன் வரம் பெற்றவனாயிருந்தான். “அட்ரசைத் தாரும், நான் கடிதம் போடுறன்” [...]
Written on June 17, 2009 | Posted in
Featured |
7 Comments
(4 வருடங்களுக்கு முன்னான பதிவொன்றின் மீளிடுகை)
அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.”
பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு.
“வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன்.
“முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. [...]
Written on June 14, 2009 | Posted in
நினைவுகள் |
17 Comments
அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா என்று இறைஞ்சுவதோடு வாலையும் ஆட்டிக் காட்டுகிறோம் என்பதைக் குறித்த வலியே அது.
அன்றைய நாளில் கானாபிரபாவிடம் இதுபற்றிக் கேட்டிருந்தேன். அவர் ஐயோ சத்தியமா அந்த [...]
Written on June 9, 2009 | Posted in
குறிப்புகள் |
23 Comments
த.அகிலன்
வாழ்வு, ஆசைப்படுகிற காலத்திலேயே ஆசைகளைத் தீர்த்து வைக்கிறதா என்ன? கனவுகள் நீர்த்துப் போன பிறகு கனவு களை அடையும் வழிகளைக் காட்டுகிறது சில வேளைகளில். துயரத்தின் புன்னகையைத் தவிர வேறெதுவும் தோன்றுவதில்லை அப்பொழுதுகளில். காயத்திரி இதை இவ்வளவு தாமதமாக நான் எழுதியிருக்கக் கூடாது. தாமதம், என் வாழ்வில் பெரும் பாகத்தைத் தின்று விட்ட தாமதம். அணு அணுவாய்ப் பிசைந்து மனசை நெருப்பில் வாட்டி யெடுக்கிற தாமதம். தயக்கங்களும் அச்சங் களும் என்னை அரித்துத் தின்று எனது தைரியத்தை [...]
Written on June 8, 2009 | Posted in
சிறுகதைகள் |
7 Comments
“சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். “தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான்.
சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் [...]
Written on June 7, 2009 | Posted in
சிறுகதைகள்,
பத்திகள் |
30 Comments
குப்பியைக் கடித்துவிடக் கூடாது என முன்னரே திட்டமிட்டிருந்தார்களோ என்னவோ சாகீரின் கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. சர்வ நிச்சயமாய் தன்னைக் குறிவைத்துக் கொத்தியிருக்கிறார்கள் என்பது அவனுக்கு விளங்கியது. செத்து விட வேண்டும் . இடுப்பிலிருக்கும் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை. வீடு கொடுத்தவர்களின் கதி என்னாயிற்றோ?. அவர்களையும் அள்ளிச் சென்றிருக்கக் கூடும். என்னைப் போலவே கைகளைப் பின்னால் முறித்து [...]
Written on June 7, 2009 | Posted in
சிறுகதைகள் |
1 Comment