யாழ்ப்பாணத்தின் ஐஸ்கிரீம்…
இந்தப் படத்த நான் யாழ்ப்பாணத்தில இருந்து பதிஞ்சனான். இப்ப பாக்கவும் நாவூறுது..
இந்தப் படத்த நான் யாழ்ப்பாணத்தில இருந்து பதிஞ்சனான். இப்ப பாக்கவும் நாவூறுது..
1
‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான்.
பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள்.
‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள்.
அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி.
இப்பொழுதும் அவனையே பார்த்தபடி..
‘யாராக இருக்கும் என்னைத் தெரிந்த ஆளாக இருப்பாளோ’
‘நிகழ்ச்சி [...]
ஊரில சிவராத்திரி மற்றது நவராத்திரி இந்த ரண்டுக்கும் விடிய விடிய நிகழ்ச்சிகள் நடக்கும். நாடகங்கள், பட்டிமன்றங்கள் எண்டு அந்த இரவு கழியும். தவிர மாவீரர் தினம் போன்ற நிகழ்வுகளும் இவ்வாறாக நடக்கும். 90 ஆண்டு மாவீரர் தினம் ஊர் முழுக்க வளைவுகள் வைத்து பெரிசா நடந்தது. கடைசி நாள் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
ஊரில நாலு திசைக்கும், ஆக்களை அனுப்பி விட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஏதாவது பிளேன் சத்தமோ, ஹெலிச்சத்தமோ கேட்டால் அவர் ஓடிவந்து சொல்லுவார். உடனை லைற் எல்லாத்தையும் [...]
எல்லாருக்கும் வணக்கம்!.. சாரல் தொடங்கி 1 வருமாகப்போது.. டும் டும் டும்.. ஆகவே நண்பர்களே.. என்னவென்றால்.. அதாவது.. ஏதோ சொல்ல வந்தனே.. ஆ… Feb 21 திகதி வரை இது நாள் வரை.. ( எத்தனை பதிவென்று நான் எண்ணவில்லை.. ஆனால்) எழுதியவற்றில் எனக்குப் பிடித்த ஐந்து அல்லது ஆறு பதிவுகளை மீள இடப் போகின்றேன்…
படித்துப் பயன்பெறுக.. ஏற்கனவே எழுதியிருந்த கருத்துக்களில் இந்த ஒரு வருடத்தில் மாற்றங்கள் எனக்குள் இருப்பின்.. அடைப்புக் குறிக்குள்ளை சொல்லுறன்..
நடந்த காலங்களில் வலியையும் [...]
அண்மையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இயக்குனர்களான சீமான், தங்கர் பச்சான், சேரன் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இயக்குனர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் இவை. தமிழக அரச இயந்திரத்தின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடுகளை சாடும் இவர் அண்மையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாகவும் தன் எண்ணத்தை பதிந்திருக்கின்றார்.நன்றி TTN, வன்னியன்
தமிழக மக்களுடனான விடுதலைப்புலிகளின் உறவு குறித்தும் போராட்டம் தொடர்பான அவர்களது நிலைப்பாடு குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே. பிரபாகரன் தெரிவித்திருந்த கருத்துக்களை அவரது குரலிலேயே இங்கு கேட்கலாம்.நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்
ஈழ விடுதலைப் போரின் ஆரம்ப காலங்களில் போராட்ட வளர்ச்சிக்கு அதிக அளவில் உதவி புரிந்த அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் குறித்தும் அவரின் உதவிகள் குறித்தும் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வே.பிரபாகரன் கூறுவதை அவரது குரலிலேயே இங்கே கேட்கலாம். இதற்கு realPlayer என்னும் மென்பொருள் அவசியமாகிறது.
நன்றி விடுதலைத் தீப்பொறி, வன்னியன்
குமுதம் றிப்போட்டரில் சோலை என்பவர் எழுதியிருந்த அந்த முதல் கட்டுரையை வாசித்த போது அட என்ற உணர்ச்சியெழுந்தது. நக்கீரன், நெற்றிக்கண், ராணி இவ்வாறான பத்திரிகைகளில் அக் கட்டுரை வந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆயினும் இதுவரை குமுதத்தில் கண்டறியாத விடயம் அது!
மகிந்த அரசினை மிக கண்டித்தும், நையாண்டி செய்தும், விடுதலைப் புலிகளை உச்சத்தில் வைத்தும் எழுதப்பட்டிருந்தது அக்கட்டுரை. அதனை எழுதியவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆலோசகராக பணியாற்றியவர் என யாரோ சொன்னார்கள். அக் கட்டுரையின் ஒரு இடத்தில் புலிகளின் [...]
UTS பல்கலைக்கழக தமிழ்ச்சங்க நிகழ்வு என்றாலும் கிட்டத்தட்ட சிட்னியின் அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர்களின் பங்களிப்புடனும் நடந்த நிகழ்வு அது!
கதம்ப மாலை 2006!
தமிழர் புனர் வாழ்வுக் கழகம் தாயகத்தில் முன்னெடுக்கின்ற மருத்துவப் பணியொன்றிற்கான நிதி திரட்டலுக்காக கடந்த சனிக்கிழமை சிட்னியில் அது நடந்து முடிந்தது.
வருடாவருடம் நடைபெறும் இந் நிகழ்வில் கடந்த வருடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடம் கையளித்த நிதித் தொகை 8000 ஒஸ்ரேலிய டொலர்கள். இம்முறையும் இதேயளவு தொகை கையளிக்கப்பட இருக்கிறது.
பெருமையாக இருக்கிறது!
எழுதுவதையும் பேசுவதையும் விட எழுதும், [...]