பின்னூட்டமும் கொஞ்சம் குறிப்புக்களும் என்ற ஒரு பதிவினை இடுகையில் பிழைச்செய்தி காட்டியது. ஆக பதிவேற்றப்படவில்லையாக்கும் என்று விட்டு மீண்டும் ஒரு தடவை பதிந்தேன். மீண்டும் பிழைச் செய்தி! சரிதான் நாளை பார்க்கலாம் என்றால் அவை இரு பதிவுகளாக தமிழ்மணத்தில் வந்திருந்தன.
எப்பிடியோ வந்திட்டாக்கும் என்ற நினைவில் ஒன்றை எனது கணக்கில் சென்று அழித்து விடலாம் என்று கணக்கிற்குள் சென்றால் அங்கே அவ்வாறான எந்தவொரு பதிவும் இல்லை. (பயமாயிருக்கு.. ஒருவேளை…….!!)
தமிழ் மணத்தினூடாக போய் சோதனைக்காக ஒரு பின்னூட்டம் இட முயல்கையில் [...]
Written on April 2, 2005 | Posted in
பத்திகள் |
Leave a comment
இதற்கு முந்தைய இதேமாதிரியான இரண்டு பதிவுகளில் சொதப்பி விட்டது. மிகச் சரியாக மீண்டும் இப்பொழுது இட முயல்கிறேன்.
கொஞ்சம் பெரிய பதிவாக இருக்கக் கூடும். சொல்லவேண்டியவையென நினைத்தவையெல்லாம் ஒரு பிசையல் போல, ஒரு குழையல் போல உள்ளே கிடக்கின்றன. வெளி வருகையில் ஒரு கூட்டாஞ்சோறு போல இருக்கக் கூடும்.
இப்போதெல்லாம் வலைப்பதிவுகளில் பின்னூட்டங்களை அதிகம் படிக்கிறேன். தேடித் தேடிப் படிக்கிறேன். கிட்டத்தட்ட தொடர் நாடக விரும்பிகளுக்கு இருக்கிற அதே ஆர்வத்தோடு!
குறிப்பாக தமிழகப் பதிவுகளில் பார்ப்பனியம் தலித் சொற்கள் அதிகம் [...]
Written on April 2, 2005 | Posted in
பத்திகள் |
7 Comments