துண்டிக்கப்பட்ட தலையொன்றின் புன்னகை

உண்ணாவிரத மேடையோரம்
அமைக்கப் பட்டிருந்தது
ஓட்டுச் சாவடி
பசித்திருந்த மனிதர்களின்
அணைப்பிலிருந்தன
செத்துப் போன குழந்தைகள்.
பந்தல் அலங்காரச் சேலைகளில்
தெறித்திருந்தன
ரத்தங்களும் தசைகளும்..
நிவாரண நிதியில்
வாங்கிக் குவிக்கப்பட்ட
சவப் பெட்டிகளுக்கு
போதாதிருந்தன
பிணங்கள்.
ரத்தம் சொட்டும்
உடைந்த கையொன்றை
முடிவிடத்தில்
பற்றியிருந்தது மனிதச் சங்கிலி
புள்ளடியினிடத்தில்
இரு எலும்புகளைக் கண்டதாய்
மிரண்டவரின்
ஆட்காட்டி விரலில் தெளிக்கப்பட்டது
ரத்தம்.
முப்பத்தாறு மைல்களுக்கப்பால்
மூளை சிதிறித் தனித்திருந்த
தலையொன்றின்
கடைவாயில் வழிந்து கொண்டிருந்தது
ஒரு புன்னகை
March-11-2009

கையறு நிலையுற்ற ஓர் இரவு

சிறிதும் பெரிதுமாய் மண்மூடைகள்
சிதைந்து கிடக்கின்றன.
தெருவெங்கும்
வனமெங்கும்
பதுங்கு குழி வாயில்களிலும்
கடற்கரைக் கொட்டில்களிலும்
சிதறிக் கிடக்கின்றன
அவை.
அடுக்கி வைத்த
மண் மூடைகளின் பின்னே
குறி பார்க்கின்றன
துப்பாக்கிகள்.
முன்னேயும் தான்!
சூடுகளிலும் பொஸ்பரஸ் எரிவுகளிலும்
க்ளஸ்ரர் குண்டுகளிலும்
மண்மூடைகள்
வயிறு பிழந்து விழுகின்றன.
புதிய மண்மூடைகளை அடுக்குகிறார்கள்
யாரோ
உள்ளிருக்கும் மண்
சொரியும் மூடையொன்றில்
கண்களும் கால்களும்
முளைத்ததைக் கண்டேன்.
என் கண்கள் குருடாகின..
0 0 0
நீண்டு
கடலில் இறங்குகிறது
எஞ்சியிருந்த ஒற்றைத் தெரு.
எதிர்த் திசையில்
வரிசையுற்று நிற்கின்றன
மரணங்கள்,
ஒன்றன் பின் ஒன்றாக..
மரணங்கள்
குழந்தைகளை ஏந்தியிருந்தன.
சிறுவர்களை அணைத்திருந்தன.
மரணங்கள் எழுதப்பட்ட தாள்களின்
ஓரத்தில் குத்தப் படுகிறது முத்திரை.
அவலமும் வீரமுமென..
தாள்களும்
மரணத்தின் புகைப் படங்களும்
பட்டங்கள் போலேறி
செயற்கைக் கோளில் புகுந்ததை
பொஸ்பரஸ் வெளிச்சத்தில்
சிறுவர்கள் [...]

நாங்கள் எதற்கு சாட்சிகளாக்கப் பட்டிருக்கிறோம்

நாங்கள் எதற்கு
சாட்சிகளாக்கப்
பட்டிருக்கிறோம்
அல்லது
எதற்காக
சாட்சிகளாயிருக்கிறோம்..
எனக்கெதுவும்
புரியவில்லை.
பகலையும் இரவையும்
கண்டு
அஞ்சும் என்
கண்களை
என்ன செய்வேன்..?
000
ஆசிரியர், வெளிச்சம் சஞ்சிகை, கலை பண்பாட்டுக் கழகம், கோப்பாயோ கொக்குவிலோ என முகவரியிட்டு பதின்ம வயதுகளில் நான் எழுதிய எந்த ஆக்கமும் வெளிச்சம் இதழில் வந்ததில்லை. பதினைந்துகளில் நின்றிருந்த வயதது. அதற்குரிய சந்தேகங்களோடு உவங்கள் தெரிஞ்சாட்கள் எழுதினாத்தான் போடுவாங்கள் போல என நம்பினேன். வெளிச்சம் ஆசிரியரைத் தெரிந்து கொள்ள வேண்டும். பழகிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. ஆனால் அதில் மெனக்கெட முடியாதளவிற்கு இடப்பெயர்வுகளும் ஓட்டங்களும் அடுத்த ஆண்டுகளில் நிறைந்து விட்டிருந்ததனால்.. [...]

வாழ்வினூடு பயணிக்கும் புதுவையின் கவிதைகள்

கவிஞர் புதுவை இரத்தினதுரைஈழ விடுதலைப் போருடன் பயணிக்கும் இலக்கியத்தில், அறியப்பட்ட பாடலாசிரியர். இரவும் ஒரு நாள் விடியும் அதனால், என்பது போன்ற, தமிழகத் திரைப்பாடல்கள் போர்க் கீதங்களாக ஒலித்த நாட்களில், ஈழ எழுச்சி கீதங்களை தமக்கான தனித்துவங்களோடு ஆக்கத் தொடங்கி இன்று வரை (இன்றைய பாடல்கள் எழுச்சிப் பாடல்கள் என்ற நிலையிலிருந்து ரசனைக்குரிய ஜனரஞ்சகப் பாடல்கள் என்னும் தளம் நோக்கிச் செல்வதாகவே தனிப்பட உணர்கிறேன். இதற்கு பாடல் ஆக்கம் பெரும்பாலும் இளையவர்களான போராளிகளின் கைகளில் இருப்பதுவும் ஒரு [...]

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231