நான் வளர்கிறேனே! மம்மி


உங்கள் எல்லாருக்கும் இண்டைக்கு நான் வளந்த படங்கள் காட்டப்போறன். குட்டிப் பெடியனா இருக்கேக்கை எடுத்த படங்களில இருந்து இந்தா இப்ப முந்தாநாத்து எடுத்த படம் வரைக்கும்… படங்களோடை கொஞ்சம் கதைக்கவும் போறன்..
Image hosted by Photobucket.com

இந்தப்படம் என்ரை பிறந்தநாள் ஒண்டுக்கு எடுத்த படம். என்ன அமைதியா நல்ல பெடியனாய் இருக்கிறன் என்ன? ம்.. சொல்ல மறந்திட்டன். இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.


Image hosted by Photobucket.com
இந்தப்படத்தை ஏற்கனவே என்ரை வலைப்பதிவில போட்டிருக்கிறன். ஏதோ ஒரு நாடகத்தில (பெயர் மறந்து போச்) நான் ரீச்சர் வேசம் போட்டிருக்கிறன். அசல் பொம்பிளை மாதிரி சீலை நுனியை பிடிச்சிருக்கிறனாம் எண்டு ஆரோ பின்னூட்டம் அப்ப போட்டிருந்தவை. 93 காலப்பகுதியில எடுத்த படமெண்டு நினைக்கிறன்.

Image hosted by Photobucket.com

ஹி..ஹி.. இந்தப் படத்தை வைச்சு வசந்தன் ஒரு போட்டியே அறிவிச்சிருந்தவர். கனபேர் சரியா சொல்லியிருந்தவை. அதுக்கு காரணம் வசந்தன் என்ன படம் போட்டாலும் அது நானாய்த்தான் இருப்பன் எண்ட மாதிரி போட்டுது. ஆனா முதலில இந்தப்படத்தை பாத்த வசந்தனும் உது ஆரெண்டு தான் கேட்டவர். 96 இல வன்னியில முத்தயன் கட்டு அணைக்கட்டோரம் எடுத்த படம் இது. வடிவா இருக்கிறன் தானே!

Image hosted by Photobucket.com

2003 இல ஒரு நாள். வெளிய மழை பெய்து கொண்டிருந்தது. யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம். அப்பிடிப் படுத்திருந்தவனை தட்டி எழுப்பி ராகுலன் எடுத்த படம் இது. தலைகணியை விட மாட்டாங்கள்!



Photobucket - Video and Image Hosting

கடைசியாக

This entry was posted on Tuesday, September 13th, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 Responses to “நான் வளர்கிறேனே! மம்மி”

  1. 'மழை' ஷ்ரேயா(Shreya) on September 13th, 2005 at 7:54 am

    முதல் படந்தான் எல்லாத்துக்குள்ளயும் வடிவா இருக்கு. நித்திரையால எழுப்பி எடுத்த படத்தில உங்கட கண்ணைப் பாக்க பயமா இருக்கு!!

  2. Anonymous on September 13th, 2005 at 9:08 am

    எழுதிக்கொள்வது: chenthooran

    ஐயோ ஐயோ…………..

    17.5 13.9.2005

  3. -/பெயரிலி. on September 13th, 2005 at 11:58 am

    /யன்னலைத்திறந்து விட்டுவிட்டு மழைச்சாரல் என்னில பட படுக்கிறதுக்கு எனக்கு சரியான விருப்பம்./

    அதன் சுகமே தனி

  4. Anonymous on September 13th, 2005 at 1:09 pm

    எழுதிக்கொள்வது: Seelan

    என்ன திடீரென்றுää வழமையாக வசந்தன் தானே உங்களது படங்களை வெளியிடுவார். அந்த வெளியீட்டு உரிமை அவருக்கு தானே இருக்கிறது?

    21.5 13.9.2005

  5. Nanpan on September 13th, 2005 at 4:24 pm

    eppidi iruntha nee ippidi aayiddai! last foto super!

  6. வசந்தன்(Vasanthan) on September 13th, 2005 at 5:19 pm

    //என்ன திடீரென்றுää வழமையாக வசந்தன் தானே உங்களது படங்களை வெளியிடுவார். அந்த வெளியீட்டு உரிமை அவருக்கு தானே இருக்கிறது?//

    நீர் ஒப்பந்தத்தை மீறீட்டீர்.
    அப்ப நான் என்னட்ட கடசியாக் கிடைச்ச படங்களை வெளியிடவோ?

  7. Anonymous on September 13th, 2005 at 6:44 pm

    ada pongkada…
    alaaluku ……….velai veddiyillaamal vilayaaduriyal ARR iyum paarungko….photoivaium podunko…m..m…vaazhka tamil!
    ….naantha somee

  8. Sri Rangan on September 13th, 2005 at 9:49 pm

    சயந்தன்,வணக்கம்!உண்மையைச் சொல்லுங்கள!சாறி கட்டிய படத்துக்குக் கீழ் வரும் படங்களில் உருவவொற்றுமை இல்லையே… யாரது? சிறியவயதில் இவ்வளவு அழகான பையன் கூர் மூக்குடன்… வளர்ந்ததும் பாருங்கள் குரும்பை மூக்குடன் வில்ல…மாதிரி… இருக்கமுடியாது!பாஞ்சாலியாய் அழகாக வளர்ந்த பையனின் இந்தப்படங்கள் உண்மையானதா? அப்படியானால் எதைச் சொல்ல?ம்…சுமார்தாம் பையா… கிந்திச் சகோதரிகள்…. சான்சேயில்லை.

  9. வசந்தன்(Vasanthan) on September 14th, 2005 at 12:31 am

    ஹிஹிஹி..
    கூர் மூக்கு, குரும்பை மூக்கு.
    சிறீரங்கன்,
    நல்லாச் சொன்னியள், ஆனா முத்தையன்கட்டுக்குளப்படத்தவிட மற்ற எல்லாம் சயந்தன் தானெண்டத நான் உறுதிப்படுத்திறன்.

    கிந்திச் சகோதிரிகள் புரியவில்லை.

  10. சயந்தன் on September 14th, 2005 at 1:14 am

    //ஆனா முத்தையன்கட்டுக்குளப்படத்தவிட மற்ற எல்லாம் சயந்தன் தானெண்டத நான் உறுதிப்படுத்திறன்//

    இதென்ன கரைச்சல். இதுக்காக இனி நான் வன்னியில ஆரும் விதானைமாரை பிடிச்சு உறுதிப்படுத்த முடியுமோ?

    சிறி ரங்கன்.. நீங்கள் சொன்ன பிறகு தான் பாத்தன். முகத்தில மூக்கு மட்டும் தனிய வளந்திருக்கிறதை!

  11. U.P.Tharsan on September 14th, 2005 at 1:51 am

    //இந்தப் படம் எடுத்தண்டு தான் இந்தியா எங்களுக்கு சாப்பாடு போட்டது.//
    :-) ) Supper

  12. கொழுவி on September 14th, 2005 at 4:05 am

    //சிறி ரங்கன்.. நீங்கள் சொன்ன பிறகு தான் பாத்தன். முகத்தில மூக்கு மட்டும் தனிய வளந்திருக்கிறதை!//

    அப்ப மூளை???

  13. 'மழை' ஷ்ரேயா(Shreya) on September 14th, 2005 at 7:18 am

    //நீர் ஒப்பந்தத்தை மீறீட்டீர்.
    அப்ப நான் என்னட்ட கடசியாக் கிடைச்ச படங்களை வெளியிடவோ?//

    வசந்தன்.. இதிலயென்ன கேள்வி.. வெளியிடுமன். வேணுமெண்டா கொஞ்ச ஹிந்திச் சகோதரிகளுக்கும் காட்டலாம் (சயந்தன் இப்ப ஓமெண்டுவாரே!) ;O)

  14. Anonymous on September 14th, 2005 at 12:46 pm

    எழுதிக்கொள்வது: Nirekka

    Nice pic’s sayan…………..specialy the first one.There are many diffnts in face sinc i saw u last June…… Hope to hear from you soon.

    20.40 14.9.2005

  15. Anonymous on September 14th, 2005 at 5:56 pm

    எழுதிக்கொள்வது: Pooja

    Hey, schauen Sie nett!

    1.56 15.9.2005

  16. Anonymous on September 14th, 2005 at 10:55 pm

    Pooja,Guten tag! Mit diesem Schreiben teile ich Ihnen ihre “Pinnodam”-”schauen Sie nett” ist falsche Begriff mit.
    Richtig ist”Sie sehen nett aus!”;schauen Sie” ist völlig andre bedeutung.

  17. சயந்தன் on February 1st, 2007 at 11:25 am

    அட கடவுளே.. இந்தப் பதிவு தமிழ்மணத்தில இப்ப என்ன கோதாரிக்கு திரப்பட்டுகிறது என எனக்குத் தெரியாது.

  18. வந்தியத்தேவன் on September 9th, 2009 at 6:51 pm

    கவிதை கவிதை, எனக்கு அவ்வை சண்முகிப் படம் தான் பிடித்திருக்கிறது. ஒருவரின் பரிணாம வளர்ச்சியை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231