மெல்பேண் To கொழும்பு


இன்று அதிகாலை கொழும்பில் வீட்டுக்கதவினை தட்டி ( வழமையாக இது இலங்கை இராணுவம் செய்கின்ற வேலை.) அம்மாவை தூக்கத்திலிருந்து எழுப்பி எனது வருகை குறித்த அதிர்ச்சி மகிழ்ச்சியினை கொடுத்த போது நேரம் 2 மணி.

மெல்பேணில் புறப்பட்ட விமானம் சிங்கையை வந்தடைந்த போது சிங்கை நேரம் இரவு 9.15. மீண்டும் சிங்கையிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட போது நேரம் 10.40.

ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த, நண்பர்கள் எனது வீட்டிற்கு எந்த விதமான தகவல் கசிவும் விடாதபடி கன கச்சிதமாக என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்து செல்ல வந்திருந்தார்கள்.

எல்லாம் திட்டமிட்ட படி முடித்தாயிற்று. அம்மாவிற்கு இன்னும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் தீரவில்லை. நண்பர்களுக்கு நன்றி.

சிங்கை. பிரமிக்க வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தோடு ஒப்பிட்டால் மெல்பேண் நிலையம் குடிசை. கொட்டில்.

சிங்கை. கவலையுற வைத்த விடயம்.
சிங்கை விமான நிலையத்தில் லோக்கல் அழைப்புக்களுக்கு இலவசம் என்பது முன்னமே தெரிந்திருந்தால் ஈழநாதனின் தொலைபேசி இலக்கத்தை கொண்டு வந்து அலட்டியிருக்கலாம்.

இந்த பயணத்தின் நோக்கங்கள் அல்லாத ஒன்று
நானும் வசந்தனும் வேறு நபர்கள் என்பதனை உணர்த்துதல்.

சந்திக்கலாம்.

This entry was posted on Thursday, June 23rd, 2005 and is filed under பத்திகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 Responses to “மெல்பேண் To கொழும்பு”

  1. 'மழை' ஷ்ரேயா(Shreya) on June 23rd, 2005 at 7:15 am

    2 பேரும் ஒரே மாதிரி கொழும்புப் பயணமென்டு பதிவு போடுறீங்கள்…பிறகு வேற வேற ஆக்கள் என்டுஞ் சொல்லுறீங்கள்….பொய் சொல்லக் கூடாதென்டு தெரியாதோ!

  2. Anonymous on June 23rd, 2005 at 7:33 am

    எழுதிக்கொள்வது: இளைஞன்

    ஆகா, போய்விட்டீர்களா அரசியல் சூறாவளிகளே. வரும்போது நிறைய சுழற்றி சுற்றிக் கொண்டு வாருங்கள்.

    7.30 23.6.2005

  3. Anonymous on June 23rd, 2005 at 7:53 am

    எழுதிக்கொள்வது: eelanathan

    தொலைபேசி இலக்கமும் கொடுத்து பேசுவது இலவசமென்று தகவலும் கொடுத்தால் பேசாமல் விட்டுவிட்டுப் புளுகிறான் புளுகு.அப்படித்தான் இலவசமில்லாவிட்டாலும் கையில் ஒரு பத்துச் சதமில்லாமல் கொழும்பு போகும் ஆளை இப்போதுதான் பார்க்கிறேன்.

    13.51 23.6.2005

  4. வசந்தன் on June 23rd, 2005 at 9:54 am

    ஹாய்!
    வணக்கம். சுகமாகப் போய்ச் சேந்தீரா?
    எனர பதிவைப் படிக்கவும். சிறிரங்கத்தாருக்குச் சில படங்கள் போடும்.
    வன்னியிலிருந்தும் உம்மட நேரடிப் பதிவ எதிர்பாக்கிறன்.
    பிறகு யாழ்ப்பாணம்.

    சரிசரி, இஞ்ச ‘பெயன்கள்’ எண்டு கொஞ்சப்பேர் கடுமையா ராத்திறாங்கள். அவங்களயும் படியும்.
    வேற என்ன மின்னஞ்சல் போட எலுமெண்டால் போடவும்.
    -வசந்தன்.-

  5. P.V.Srirangan on June 23rd, 2005 at 3:44 pm

    சயந்தன் கவனமாகத்திரியும்.விசர்பிடித்த ஆமிக்காரன்கள் வைத்ததேதாம் சட்டம்.யாழ்பாணத்தில ஆமிக்காரன்களுக்குத்தாம் சகல உரிமையுமாமே!ரொம்பக் கவனம்.கடற்கரைப் பக்கமாய்போய் படம் புடிச்சுப் போடும்.நம்தேசத்தைப் படங்களாகவாவது பார்த்துவிடும் ஆசைதாம்.

  6. Anonymous on June 24th, 2005 at 5:15 am

    எழுதிக்கொள்வது: சயந்தன்

    நன்றி. சிறீரங்கன். படங்கள் போடுகிறேன்.
    வசந்தன். உமது பதிவு பார்த்தன். வாழ்வோடு விளையாட வேண்டாமே..

    9.14 24.6.2005

  7. Anonymous on June 24th, 2005 at 6:45 pm

    எழுதிக்கொள்வது: Santhehee

    இல்லை இல்லை நாங்க நம்ப மாட்டம்!
    ரெண்டு பேருடைய புகைப்படம் பாக்கும் வரை!!!

    17.58 25.6.2005

  8. Anonymous on June 25th, 2005 at 1:19 pm

    எழுதிக்கொள்வது: theepa

    உன்கல் படெவுகல் எஅல்லம் நலக இஉர்குது.சரெ சிங்போர் பொனெக ப்ரகு cஒலொம்பொ பொனெக ஒரு வதய் குட சொலுர்டகு இஅல்ல்ஜ.

    13.18 25.6.2005

  9. Anonymous on June 26th, 2005 at 1:06 pm

    எழுதிக்கொள்வது: theepa

    Unkal ealuthukal ealam nalaka irukuthu. Kojma kuda elautha mujasekalam.

    13.4 26.6.2005

  10. Anonymous on June 26th, 2005 at 2:49 pm

    எழுதிக்கொள்வது: குழைக்கட்டான்

    ஆரப்பா உது தீபா? அடிக்கடி பின்னூட்டம் போடுறா? :) ) :) )

    14.47 26.6.2005

Leave a Reply

முன்பதிவுகள்

கடந்தவை

இணைப்புக்கள்

Skype Me™!

இதே நிலவில்

ட்விட்டுகிறேன்

  • Could not connect to Twitter

From my Flickr

face1Swiss_D3126Swiss_D3247Swiss_D3069Swiss_D3074img_dd0829img_0506img_0475img_0335img_0277img_0257img_0252IMG_0235IMG_0233IMG_0231